Wednesday, October 04, 2006

புதுவயலில் உள்ள மேலப்பெருமாள் கோயில்.





புதுவயலில் உள்ள ஒரு கோயில் மேலப்பெருமாள் கோயில். அதன் அழகை இங்¢கு தரிசித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஊரின் மேற்குப்புறம் உள்ள கோயில் இது. கிழக்குப் புறம் ஒரு பெருமாள் கோயில் உண்டு. அதற்கு கீழப் பெருமாள் கோயில் என்று பெயர்.
கோயில் தனியார் சொந்தமானது என்றாலும் கூட பொதுமக்களின் சொத்தாகப் பராமரிக்கப்படுவது இ¢ங்கு உள்ள சிறப்பு. இதில் ஒரு கோபால கிருஷ்ணரை எங்களின் முன்னோர் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். பிள்ளை பிறக்காதபோது ஒரு முறை இந்தக் கடவுளை இந்தக் கோயி¢¤லில் வைத்து வழிபட்டு, மண்சோறு சாப்பிட்டுக் குழந்தை பெற்றதாக எங்களின் வரலாறு நீள்கிறது.
கோயிலின் சிலைகள் அழகு. சுந்தரராஜப் பெருமாள் இருதேவியரின் இருக்கையோடு காட்சி தருகிறார். அடுத்து தாயார் சர்வ அலங்காரக் காட்சி, ஆண்டாளின் திவ்ய சொருபம். இவற்றோடு இங்கு ஒரு முனி கோயிலும் உண்டு.
கோயிலின் எதிரில் குளம் ஒன்றுண்டு. அதன் பிரதிபலிப்பில் கோயில் தெரிவது போல படம் எடுக்கப் பெற்றுள்ளது. வாருங்கள் புதுவயலுக்கு