Wednesday, May 17, 2006
இரண்டாம் கட்டு
இரண்டாம் கட்டு என்று சொல்லப்படுகிற பகுதியின் படம் இது. சூரிய ஒளி விழும் வகையில் காற்றோட்டத்துடன் கட்டப்பட்டுள்ள இப்பகுதி மிக அழகானது,
ஒரு தேக்குத்தூணின் வேலைப்பாடு
பெரிய வீடுதான்
பெரிய வீடுதான்
ஆனால் இதில் நான்கில் ஒரு பங்கில் அதனுள் மூன்றில் ஒரு பங்கு எமக்குச் சொந்தம்
அப்படிச் சொந்தமான அறைதான் மேல் இருப்பது
நடுவில் பெல்ஜியம் கண்ணாடி
அதற்கு இரு பக்கங்களிலும் தஞ்சாவூர் ஓவியங்கள் ஜிமிக்கி அலங்காரத்துடன்
இதுவே உள் அறை
இதற்கு வெளியே ஒரு அறை உண்டு
அந்த அறை இதே அளவு உடையது
இந்த இரண்டு அறைகள் எமக்குச் சொந்தம்
புதுவயல்
புதுவயல்அருமையான ஊர்.
சுற்றிலும் முந்திரிக் காடுகள்
அதில் துள்ளி ஓடும் மான்கள்
புழுதி பறக்கும் வீதிகள்
மழையில் மண்வாசனை மணக்கும்
நீண்டு உயரும் புகைபோக்கிகள்
நெல் அரவை மில்களின் அணிவகுப்பு
உழைப்பாளிகளின் தலைக்கவசம் சாக்கு
வாய்க்கவசம் மரியாதையான பேச்சு
இப்படிப்பட்ட ஊர் என் சொந்த ஊர்
செட்டிநாட்டு மரபும் பண்பாடும் சமையலும் மணக்கும்
இந்த ஊரில்
கைலாச விநாயகர் கோயில்
மேலப் பெருமாள் கோயில்
கீழப் பெருமாள் கோயில்
காட்டுச் சிவன் கோவில்
எனப் பல கோயில்கள் உண்டு
இராமநாதன் செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
சரசுவதி வித்யாசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளிஎனப் பல பள்ளிகள் உண்டு
வீதிகளில் பேர் பெற்றது நடுவீதி
இதனுள் ஒரு வீதியில்என் வீடு
அதுவே நீங்கள் பார்ப்பது
Subscribe to:
Posts (Atom)