Tuesday, June 20, 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2017 சூன் மாதக்கூட்டம் பட்டிமன்றமாக

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2017 சூன் மாதக்கூட்டம் பட்டிமன்றமாக நூற்றாண்டு கணட பராம்பரிய இல்லமான மெ.செ. இல்லத்தில் நடைபெற்றது. சு.ராம தெருவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான இல்லத்தின் பின்கட்டில் உள்ள கொட்டகையில் நல்ல விளக்கொளியில் கூட்டம் நடந்தது.
பட்டிமன்றத்துக்கு பேரா மு.இராமச்சந்திரன் தலைமை வகித்தார். இன்றையச் சூழலில் இளைஞர்கள் முனமாதிரியாகக் கொள்ளவேண்டியவர் பரதனே, தாரையே, சடாயுவே என்பது தலைப்பு. கம்பன் கழகத்தின் வலுவான விழுதுகளான பேரா மு.பழநியப்பன், பேரா சொ.சேதுபதி, பேரா மா.சிதம்பரம் அணித்தலைமையேற்றனர். இளம் பேச்சாளர்கள் செல்வி தீன்சா நூப், செல்வி அகிலா, திரு சரவணச்செல்வன் துணை நின்றனர். பட்டிமன்றத்தைச் செவிமடுத்தவர் கொடுத்துவைத்தவர்!
தலைவர் தன் பேருரையில் 1.தூயவனான சடாயுவின் குண நலன்கள் 2.பெண்மைக்குப் பங்கம் விளையும் நேரத்தில் எதிர்த்து உயிரையும் கொடுத்துப் போராட முன்வரல் 3.அடிபட்டுக்கிடந்தபோதும் இராமலக்குவர் வரும்வரை உயிரைத்தக்கவைத்து அவருக்கு நல்வழிகாட்டல் முதலியவற்றைக்கொண்டு சடாயுவே இன்றைக்கு இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழக்கூடியவர் என்று தீர்ப்பளித்தார். முன்னதாக அழகப்பர் 108வது பிறந்தநாளையொட்டிக் கவிதாயினி வள்ளிமுத்தையா புகழஞ்சலி கவிதை வாசித்தளித்தார்.
தங்கள் பராம்பரிய இல்லத்தில் பொதுவீட்டார் ஒத்துழைப்புடன் கம்பன் விழாக்கூட்டத்தைப் பெருமுயற்சியுடன் விடாது நடத்துகிற கம்பன் அடிசூடி திரு பழ.பழநியப்பனைப் போற்றி வணங்குகிறேன்
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Thursday, June 01, 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜுன் மாதக் கூட்ட அழைப்பு

கம்பன் கழகம்.
காரைக்குடி
அன்புடையீர்
வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் கம்பன் கழகத்தின் ஜுன் மாதத்திருவிழா 3.6.2017 அன்று சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு கீழ ஊருணியின் மேற்குப் பக்கம் செல்லும் சு. ராம. தெருவில் அமைந்துள்ள நூற்றாண்டு கண்ட செட்டிநாட்டுப் பாரம்பரிய மெ.செ. இல்லத்தில் நடைபெறும்.
இறைவணக்கம்
வரவேற்புரை - கம்பன் அடிசூடி
கம்பன் அடிப்பொடி 108 ஆம் பிறந்த நாள் புகழ் அஞ்சலி - திருமதி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்கள்
பட்டி மண்டபம்
நடுவர் - திரு மு. இராமச் சந்திரன் (தென்காசி) (சிவகாசி)
தலைப்பு
இன்றைய இளைய சமுதாயத்தினர் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியவர்
பரதனே
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலைஅறிவியல்கல்லூரி, திருவாடானை
மாணவி அ.தீன்ஷா நூப்
உமையாள் இராமநாதன் கல்லூரி, காரைக்குடி
சடாயுவே
முனைவர் மா. சிதம்பரம்
அழகப்பா கலைக்கல்லூரி, காரைக்குடி
திரு. த. சரவணசெல்வன்
கோவில்பட்டி
தாரையே
முனைவர் சோ. சேதுபதி
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி
காரைக்கால்
செல்வி ந. அகிலா
சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
8.30 மணி சிற்றுண்டி
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அனைவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி
அரு.வே. மாணிக்கவேலு, சரசுவதி ஆச்சி அறக்கட்டளை
அன்னை மெடிக்கல்ஸ், பொன்னமராவதி
நமது செட்டிநாடு இதழ்
காரைக்கு மெ.செ. அ. மெ. பழ மீனாட்சி ஆச்சி
110 ஆம் பிறந்த நாளுக்காக அவர் தம் குடும்பத்தினர்